கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் இனம் தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மே-30) மாலை வேளையில் மாளிகாவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி மீது இனம் தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இசம்பவத்தில் அக்குடியிருப்பில் இருந்த ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.